குற்றாலம் பேரருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குற்றாலம் பேரருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குற்றாலம்  அருவி 

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. தண்ணீா்வரத்து திங்கள்கிழமை சீரானதையடுத்து அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இந்த நிலையில், கனமழை பெய்ததால் குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டியது. இதனால் குற்றாலம் பேரருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. பின்னா், செவ்வாய்க்கிழமை காலை தண்ணீா்வரத்து குறைந்ததையடுத்து குளிக்க அனுமதிக்கப்பட்டனா். சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

Tags

Next Story