கொல்லிமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கொல்லிமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கொல்லிமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பணிகள் தினமும் வந்து செல்கிறார்கள். கொல்லிமலைக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சில நாட்களாக மழை பெய்து வருவதால், அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் கொட்ட ஆரம்பித்துள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர்.

இந்நிலையில், தென்காசியில் குற்றால அருவியில் திடீர் வெள்ளம் கொட்டியதில், அருவியில் குளித்துக் கொண்டிருந்த, 15 வயது சிறுவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி, புளியஞ்சோலை அருவிகளுக்கு செல்ல, மே 18 முதல் வனத்துறையினர் தடை விதித்தனர்.

தற்போது கொல்லிமலையில் மழை குறைந்துள்ளதால், நேற்று முதல் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்தனர். தொடர்ந்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவிகளில் நீராடி புகழ் பெற்ற அறப்பளீஸ்வரர் கோவில், எட்டுக்கையம்மன் மாசி பெரியசாமி கோவில்களில் தரிசனம் செய்தனர்.

Tags

Next Story