பழைய குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

பழைய குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
பழைய குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
பழைய குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு நேற்று இரவு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளை குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அருவிகளில் தண்ணீர் குறைந்ததை தொடர்ந்து இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

இதனால் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுலா சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் ஆர்வமுடன் குற்றால அருவிகளில் குளித்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story