கொளுத்தும் வெயிலிலும் அருவியில் உற்சாக குளியலிடும் சுற்றுலாப் பயணிகள்...

கொளுத்தும் வெயிலிலும் அருவியில் உற்சாக குளியலிடும் சுற்றுலாப் பயணிகள்...

 திற்பரப்பு அருவி

கொளுத்தும் வெயிலிலும் திற்பரப்பு அருவியில் உற்சாக குளியலிடும் சுற்றுலாப் பயணிகள்.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நீர்நிலைகள் சார்ந்த சுற்றுலா பகுதிகளில் செல்ல மக்கள் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தற்போது தினமும் ஆயிரக்கணக் கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கோடையின் தாக்கம் காரணமாக அருவியில் தண்ணீர் வரத்து குறை வாகவே காணப்படுகி றது. தண்ணீர் குறைவாக இருந்தாலும், அருவி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் குளித்தே செல்கின்றனர்.

சிறுவர், சிறுமியரும் அருவியில் ஆனந்த குளியலிடுகின்றனர் அதிகாலை முதலிலேயே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

சிறுவர் நீச்சல் குளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கு குளித்ததற்கு சிறுவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

சுற்றுலா பணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story