படகுச்சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

புத்தாண்டை முன்னிட்டு ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகுச்சவாரி செய்து மகிழ்ந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகைக்கு புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் மற்றும் கர்நாடகா கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அவ்வாறு வந்துள்ள சுற்றுலா பயணிகள் உதகையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்படும் துடுப்பு படகு, மோட்டார் படகு, இயந்திர படகு ஆகிய படகுகளில் படகு சவாரி செய்து மகிழ்ச்சியோடு சுற்றுலா பயணிகள் திரும்பிச் செல்கின்றனர்.

Tags

Next Story