மரக்காணம் கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மரக்காணம் கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புத்தாண்டை முன்னிட்டு மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர். 

புத்தாண்டை முன்னிட்டு மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர்.
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் தங்களது குடும்பங்களுடன் புத்தாண்டை மகிழ்ச்சியான முறையில் கொண்டாடி வருகின்றனர், இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களாக விளங்கக்கூடிய மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரை பகுதிக்கு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குடும்பங்களுடன் ஏராளமானோர் வருகை தந்து புத்தாண்டு தினத்தை கோலாகலமாக கொண்டாடினர் மேலும் கடற்கரைப் பகுதிகளில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story