குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

குற்றாலத்தில்  குவிந்த  சுற்றுலா பயணிகள்
குற்றாலம் 
பொங்கல் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் உள்ளது. அருவிகளில் குளிக்க கூட்டம் அலை மோதுகிறது.
தென்காசி மாவட்டம் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி புலியருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகள் உள்ளது. மாட்டுப் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக அருவிகளில் குளிப்பதற்காக இன்று 16ம் தேதி இன்று காலையில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வந்த வண்ணம் இருப்பதால் அருவிக்கரைகள் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குளித்துச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story