அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்

பாலக்கோடு அருகே அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்த டிராக்டரை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். தப்பியோடியவர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொட்டாதனஹள்ளி முனியப்பன் கோயில் அருகே வட்டாட்சியர் ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள் நேற்று மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கற்களை ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டரை நிறுத்துமாறு சைகை செய்தனர். அதிகாரிகளை பார்த்ததும் டிராக்டரை நிறுத்திவிட்டு அதில் வந்தவர்கள் தப்பித்து ஓட்டம் பிடித்தனர்.

விசாரணையில் கற்கள் எந்த விதமான முன் அனுமதி இன்றி அவர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஒரு யூனிட் கற்களுடன் டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில், பாலக்கோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story