டிராக்டர் - ஆம்னி பஸ் மோதல்; எட்டு பேர் காயம்

டிராக்டர் - ஆம்னி பஸ் மோதல்; எட்டு பேர் காயம்

 திருவெண்ணெய்நல்லூர் அருகே டிராக்டர் - ஆம்னி பஸ் மோதிய விபத்தில் எட்டு பேர் காயமடைந்தனர்.  

திருவெண்ணெய்நல்லூர் அருகே டிராக்டர் - ஆம்னி பஸ் மோதிய விபத்தில் எட்டு பேர் காயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் மகன் சவுந்தரராஜன் (வயது 35). விவசாயி. இவர் விவசாய பணிக்காக அதே பகுதியை சோந்த 8 பேருடன், இருவேல்பட்டில் இருந்து கரடிப்பாக்கம் நோக்கி டிராக்டரில் புறப்பட்டார். பேரங்கியூர் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதியது.

இதில் டிராக்டர் சாலையோரத்தில் பள்ளத்தில் இறங்கி விபத்துக் குள்ளானது. மேலும் ஆம்னி பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணித்த கெஜலட்சுமி, ஜெயா, சந்திரா, தமிழ்ச்செல்வி, ராணி, ரஞ்சிதம், பூரணி உள்பட 8 பேர் காயமடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர், இந்த விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story