குடும்ப பிரச்சனையால் வியாபாரி தற்கொலை

குடும்ப பிரச்சனையால் வியாபாரி தற்கொலை

தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே குடும்ப பிரச்சனை காரணமாக வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து கிராமம் சந்தி தெருவை சேர்ந்த ராமசாமி என்பவருடைய மகன் சவுந்தர பாண்டியன் (35). இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். சவுந்தர பாண்டியன் கருப்பட்டி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவருடைய மனைவி ராமர் கண்டித்துவிட்டு, தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிகாலையில் வீட்டிற்கு வந்த மனைவி, தனது கணவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story