அத்துமீறி குட்கா விற்ற வியாபாரி கைது

அத்துமீறி குட்கா விற்ற வியாபாரி கைது

அருமனை அருகே சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

அருமனை அருகே சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
அருமனை அருகே காரோடு நாரகத்தான்குழி பகுதியில் பேக்கரி கடை நடத்துபவர் ராஜு (வயது 51). இவர் தனது கடையில் அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. . இதைத்தொடர்ந்து அருமனை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அந்த கடையில் சோதனையிட்டபோது தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ராஜுவை கைது செய்தனர்.

Tags

Next Story