பூ மார்க்கெட் புதிய கட்டிடத்தில் கடைகள் ஒதுக்காததால் வியாபாரிகள் அவதி

பூ மார்க்கெட் புதிய கட்டிடத்தில் கடைகள் ஒதுக்காததால் வியாபாரிகள் அவதி

வஉசி பூ மார்க்கெட் புதிய கட்டிடம் 

சேலம் சின்ன கடைவீதியில் வ.உ.சி. பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த பூ மார்க்கெட்டின் பழைய கட்டடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடம் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னமும் பூ வியாபாரிகள் மற்றும் மற்ற வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படாத நிலை உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதி கடைகளுக்கான ஏலம் நடந்தது . இதனை 3 பேர் தனித்தனியாக ஏலம் எடுத்து இருந்தனர். இந்த நிலையில் வ.உ.சி. பூ மார்க்கெட் ஏலம் எடுக்கப்பட்ட பின்னரும் இதுவரை பூ வியாபாரிகளுக்கோ மற்ற கடைக்காரர்களுக்கோ கடைகள் ஒதுக்கப்படவில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு பூ வியாபாரிகளுக்கும் மற்ற வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இது தவிர ஏற்கனவே வ.உ.சி. பூ மார்க்கெட்டில் கடை நடத்தி வந்த பூ வியாபாரிகள், மற்ற வியாபாரிகளுக்கும் கடைகள் இன்னும் ஒதுக்கப்படாத நிலை உள்ளது.

Tags

Next Story