வணிகர்கள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் !

வணிகர்கள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் !

பொதுக்குழு கூட்டம்

நாகை மாவட்டம் திருமருகலில் வணிகர்கள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டம் திருமருகலில் வணிகர்கள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நாகை மாவட்டம் திருமருகல் தனியார் மண்டபத்தில் திருமருகல் வணிகர்கள் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் ஜெயபாலசங்கர் தலைமை தாங்கினார்.சங்க நிர்வாகிகள் குமரகுருபரன்,சதீஷ்,குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் காசிஅறிவழகன் வரவேற்றார்.

இதில் தமிழ்நாடு அரசு வணிகர் நல வாரிய உறுப்பினர் செந்தில்நாதன்,மாநில துணைத்தலைவர் தென்னரசு,மாவட்ட தலைவர் வேதநாயகம்,செயலாளர் பிலிப் ராஜ்,பொருளாளர் சுபாஷ்சந்திரன், செய்தி தொடர்பாளர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் வர்த்தக சங்கத்திற்கு நலவாரியம் அமைத்து காப்பீடு செய்ய வேண்டும்,வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திருமருகல் கடைத்தெருவில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்,வர்த்தகர்கள் 100 சதவிகிதம் புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் பொருளாளர் ஹரிஹரன்,செய்தி தொடர்பாளர் ரஞ்சித்சிங் உட்பட நிர்வாகிகள்,வர்த்தகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் துணைச் செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story