சுரண்டையில் வணிகர் தின விழா ஆலோசனை கூட்டம்

சுரண்டையில்  வணிகர் தின விழா ஆலோசனை கூட்டம்
சுரண்டையில் வணிகர் தின விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
சுரண்டையில் வணிகர் தின விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை வணிகர் தினவிழா, வணிகர் பாதுகாப்பு மாநாடு ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் மே 5ம் தேதி கோவையில் நடைபெறும் வணிகர் தின மாநாட்டின் அழைப்பிதழை மாநில அமைப்பு தலைவர் தொழிலதிபர் எஸ்.வி கணேசனிடம் மாநில தலைவர் முத்துக்குமார் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ராமர், பாலன், ராமசாமி, கணபதி முருகன் உள்ளிட்ட ஏராளமான வணிக சங்கத் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story