சிவகாசி கல்லூரியில் களைகட்டிய தமிழர் மரபுத் திருவிழா

சிவகாசி கல்லூரியில் களைகட்டிய தமிழர் மரபுத் திருவிழா
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள கல்லூரியில், 'தமிழர் மரபுத் திருவிழா களைகட்டிய பொங்கல் விழாவில் மாணவ, மாணவிகள் உற்சாகம்...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள கல்லூரியில், 'தமிழர் மரபுத் திருவிழா களைகட்டிய பொங்கல் விழாவில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள அய்யநாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தைப்பொங்கல் பண்டிகை 'தமிழர் மரபுத் திருவிழாவாக கொண்டாடப்பட்டது.

கல்லூரி நிர்வாகமும், தமிழ்த்துறை அகத்தரக் காப்புறுதி மையமும் இணைந்து பொாங்கல் விழா நிகழ்ச்சிகளை நடத்தினர். கல்லூரி தாளாளர் அபிரூபன் தலைமையில், முதல்வர் அசோக் வரவேற்றார்.

அகத்தரக் காப்புறுதி மைய இயக்குநர் ஜெகநாதன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் பாரம்பரிய விளையாட்டுகள், இளவட்டக்கல் தூக்குதல், சிலம்பம், சுருள்வாள் வீச்சு, கிராமியப் பாடல்கள் பாடுவது, நாட்டுப்புற நடனம், கண்ணை கட்டிக் கொண்டு பானை உடைப்பு, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

மேலும் கல்லூரி வளாகத்தில் மாணவிகளின் கண்கவரும் ரங்கோலி கோலங்கள், புள்ளி கோலங்கள் வரையப்பட்டிருந்தன. பொங்கல் விழா சிறப்பு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பேராசிரியர்கள் சிவனேசன், அருள்மொழி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். தமிழர் மரபுத் திருவிழா நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உற்சாகமுடன் கலந்து கொண்டனர்.

Tags

Next Story