திருப்பூரில் செங்கல் ஏற்றி வந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூரில் செங்கல் ஏற்றி வந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு

பள்ளத்தில் சிக்கிய லாரி

திருப்பூரில் செங்கல் ஏற்றி வந்த லாரி சாலையின் பள்ளத்தில் சிக்கிக்கொண்ட விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் செங்கல் ஏற்றி வந்த லாரி சாலையின் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட விபத்தால் சிறது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது! திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து திருப்பூர் கருவம்பாளையம் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக செங்கல் ஏற்றி வந்த சரக்கு லாறியானது.

இன்று காலை திருப்பூர் தாராபுரம் சாலையில் லாரி வந்து கொண்டிருந்த போது , எதிர்பாராத விதமாக சாலையில் உள்ள பள்ளத்தில் லாரியின் டயரானது சிக்கிக் கொண்டது. இது அடுத்து லாரி ஓட்டுனர் உட்பட அப்பகுதியை சேர்ந்தவர்கள் நீண்ட நேரம் போராடியும் லாரியை பள்ளத்தில் இருந்து திணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் அவ் வழியே வந்த வாகனங்களை மாற்று வழி பாதையில் அனுப்பி வைத்தனர்.

இதனிடையே லாரியில் எடை அதிகமாக இருந்ததன் காரணமாக தற்போது கிரீன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுப ட்டுள்ளனர்.

Tags

Next Story