பழைய கோட்டை சாலையில் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி

பழைய கோட்டை சாலையில் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி
காங்கேயம் பழைய கோட்டை சாலையில் போக்குவரத்து நெரிசல் உண்டாவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பேருந்து நிலையத்தில் இருந்து பழையகோட்டை சாலை பேருந்து பணிமனை வரை இருபுறமும் மருத்துவமனைகள், மெடிக்கல், துணிக்கடை, டீக்கடை மற்றும் பழக்கடை என சுமார் 150க்கும் மேற்பட்ட பலவித கடைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த கடைகளில் பொருட்களை வாங்க வருபவர்கள் அல்லது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் என நூற்றுக்கணக்கான பேர் இந்த சாலையில் தாங்கள் வரும் வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

ஆதலால் பொதுமக்கள் இந்த சாலையில் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே போக்குவரத்து துறை இந்த சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story