அதிவிரைவு சாலை உயர் மட்ட பாலம் பணிக்காக போக்குவரத்து மாற்றம்

அதிவிரைவு சாலை உயர் மட்ட பாலம் பணிக்காக போக்குவரத்து மாற்றம்

போக்குவரத்து மாற்றம்

சென்னை பெங்களூர் அதிவிரைவு சாலை உயர் மட்ட பாலம் பணிக்காக சேர்க்காடு அருகே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா மேல்பாடியை அடுத்த சேர்க்காடு முத்தரசி குப்பம் பகுதியில் தமிழ்நாடு- ஆந்திர எல்லை பகுதியில் செயல்பட்டு வரும் சோதனைச்சாவடி வழியாக சென்னையில் இருந்து சித்தூர் வரை தினமும் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் சென்னையில் இருந்து பெங்களூரு வரை அதிவிரைவு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணி காரணமாக ஆந்திர மாநிலம் சீலாபள்ளி அருகே ஏற்கனவே இருந்த தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அதிவிரைவு சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சேர்க்காடு கூட்ரோடு அருகே சாலையின் குறுக்கே தடுப்பு சுவர் மற்றும் பேரிக்கார்டு வைத்து போக்குவரத்துக்கு தடை செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து சேர்க்காடு வழியாக சித்தூர் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளிமலை, பொன்னை வழியாகவும், சேர்க்காட்டில் இருந்து காட்பாடி, வள்ளிமலை கூட்ரோடு வழியாகவும் திருப்பி விடப்பட்டுள்ளது.

Tags

Next Story