போக்குவரத்து விதிமீறல் - தென்காசியில் 224 வழக்குகள் பதிவு

போக்குவரத்து விதிமீறல் - தென்காசியில் 224 வழக்குகள் பதிவு
எஸ்பி அலுவலகம் 
தென்காசி மாவட்டத்தில் போலீசார் நேற்று நடத்திய வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் இயக்கியவர்கள் மீது 224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட காவல் எஸ்பி சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் மோட்டார் வாகன குற்றங்களை தடுக்கும் வகையில் நேற்று தென்காசி மாவட்டத்தில் நடந்த வாகன சோதனையில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 7 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story