போக்குவரத்து விதிமீறல்; 90 வாகன ஓட்டிகள் மீது வழக்கு

போக்குவரத்து விதிமீறல்; 90 வாகன ஓட்டிகள் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்ட பகுதியில் புத்தாண்டு தினத்தன்று, போக்குவரத்து விதிகளை மீறியதற்கக, 90 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்ட பகுதியில் புத்தாண்டு தினத்தன்று, போக்குவரத்து விதிகளை மீறியதற்கக, 90 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்ட பகுதியில் நடைபெறும் வாகன விபத்து, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தினமும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். புத்தாண்டையொட்டி, உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டியது தொடர்பாக 22 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். அதேபோல், பதிவெண் சரியாக இல்லாதது தொடர்பாக 21 பேர், சைலன்சரை மாற்றியதாக 8 பேர், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 33 பேர், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 6 பேர் என 90 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். அதில், 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story