பிறந்த நாள் விழாவில் விபரீதம்-பீர் பாட்டிலால் மண்டை உடைப்பு

பிறந்த நாள் விழாவில் விபரீதம்-பீர் பாட்டிலால் மண்டை உடைப்பு

கோப்பு படம் 

பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின்போது பீர் பாட்டிலால் இளைஞரின் மண்டை உடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளகிணறு வன்னி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜய் தனியார் நிறுவனத்தில் சி.என்.சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.தனது பிறந்த நாள் கொண்டாட்டமாக மது அருந்த தனது நண்பர் முத்து என்பவரை அழைத்துள்ளார்.இருவரும் மது அருந்தி கொண்டிருந்த நிலையில் முத்து அலைபேசி மூலம் தனது நண்பர்கள் நால்வரை பிறந்த நாள் விழா கொண்டாட்த்தில் கலந்து கொள்ள வருமாறு அழைத்துள்ளார்

.ஏற்கனவே விஜய்க்கும் அங்கு வந்த நபர்களுக்கு முன்விரோதம் இருந்து வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்தவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.வாக்குவாதம் முற்றிய நிலையில் அருகில் இருந்த பீர் பாட்டில் கொண்டு விஜய் தலையில் தாக்கியதில் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது.இதனையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டார்.

அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார் சிறார் இருவரை கைது செய்து சிறார் குழுவிற்கு அனுப்பி வைக்கபட்ட இவர்கள் பினையின் கீழ் விடுவிக்கபட்டனர்.மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story