திமுக இளைஞரணி மாநாட்டிற்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்

திமுக இளைஞரணி மாநாட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய திருப்பூரைச் சேர்ந்த இளைஞர், ரோட்டை கடக்க முயன்றபோது அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே திமுக இளைஞரணி மாநாட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் இரவு உணவிற்கு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் திமுக ஊராட்சி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி தலைமையில் 50 பேர் தனியார் பேருந்து மூலம் சேலத்திற்கு வருகை புரிந்து இளைஞரணி மாநாடு முடித்து அவர்கள் வந்த தனியார் பேருந்தில் மீண்டும் இரவு வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் இரவு உணவிற்கு பேருந்தை நிறுத்தி உள்ளனர்.

இதில் மடத்துக்குளம் ஊராட்சி கனியூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் ( 33) என்ற இளைஞர் திடீரென தேசிய நெடுஞ்சாலை கடக்கு முயன்ற போது கோவையிலிருந்து, சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து சதீஷ்குமார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பம் குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த சங்ககிரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக இளைஞரணி மாநாட்டிற்க்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்குள் இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது...

Tags

Next Story