அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

அட்மா திட்டம் மூலம் பயிற்சி

இளநகர் கிராமத்தில் அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி முகாமில் விவசாய தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

எலச்சிபாளையம் வட்டாரம், இளநகர் கிராமத்தில், வேளாண்மை துறையின் சார்பில், அட்மா திட்டத்தின்கீழ், 40விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமாலா தலைமை வகித்து, அட்மா திட்ட செயல்பாடுகள், மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள், நுண்ணீர் பாசனம், இயற்கை உரங்கள் பயன்பாடு, மண், நீர் பரிசோதனையின் முக்கியதுவம் பற்றி விவசாயிகளுக்குகூறி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.

பி.ஜி.பி., வேளாண் கல்லூரி உதவிபேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு நிலக்கடலை பயிரின் விதை நேர்த்தி முறைகள் முதல் அறுவடை தொழில்நுட்பங்கள்வரை பயிர்சாகுபடி முறைகள் மற்றும் ஹெர்போலிங் என்ற மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்தி மயில்கள், எலிகள், முயல்கள், காட்டுபறவைகள், அண்டவிடாமல் பயிர்களை பாதுகாப்பது மட்டுமல்லால் பயிர் மேலாண்மை முறைகள் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார்.

உதவி வேளாண்மை அலுவலர் வெற்றிவேல் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வேளாண் இடுபொருட்கள் பற்றி விவசாயிகளுக்கு கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் பரமசிவம் உழவன் செயலி பதிவிறக்கம், பயன்பாடுகள் பற்றி கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் திவாகர், உதவி தொழில்நுட்ப மேலாளர் வாசுகி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story