பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவு குறித்த பயிற்சி முகாம்

பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவு குறித்த பயிற்சி முகாம்

காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவு குறித்த பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.


காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவு குறித்த பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் மதியம் சுமார் 1 மணி அளவில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பதிவு குறித்த பயிற்சி வகுப்பு காங்கேயம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமிற்கு காங்கேயம் வட்டாச்சியர் மயில்சாமி தலைமை தாங்கினார்.

திருப்பூர் மாவட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் ஆர்.கோவிந்தராஜ் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரு வருடம் மற்றும் அதற்கு குறைவான மாதங்கள் உள்ள குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பதிப்பு மற்றும் இறந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் பதிவு செய்வது குறித்து பயிற்சி வகுப்புகளை நடத்தினார். இந்நிகழ்வில் காங்கேயம் பகுதி வருவாய் ஆய்வாளர் விதுர்வேந்தன் மற்றும் சுமார் 40 கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story