அம்பாசமுத்திரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

அம்பாசமுத்திரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் பயோ பிளாக் பயன்படுத்தி மீன் வளர்ப்பு பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் பயோ பிளாக் பயன்படுத்தி மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் மணிமுத்தாறு, வெள்ளங்குளி கிராம விவசாயிகளுக்கு அம்பாசமுத்திரம் வேளாண்மை உதவி இயக்குனர் கற்பகராஜ் அறிவுறுத்தலின்படி நேற்று பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஈழவேணி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Tags

Next Story