சிக்னல் பிரச்சனை காரணமாக ரயில்கள் நிறுத்தம்

மதுராந்தகத்தில் சிக்னல் பிரச்சனை காரணமாக ரயில்கள் நிறுத்தப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் ரயில்வே நிலையத்தில் வட மாநிலத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஜோத்பூர் To நாகர் கோவில் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ரயில் ,சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லக்கூடிய முத்துநகர் விரைவு ரயில், சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லக்கூடிய ராமேஸ்வரம் விரைவு ரயில் உள்ளிட்டவை.. இந்த நிலையில் மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் ரயில்வே கிராஸ் சாலையில் கடக்க முயன்ற லாரி ரயில்வே கேட் மீது மோதியதில் ஏற்பட்ட சிக்னல் பிரச்சனை காரணமாக மதுராந்தகம் மற்றும் மதுராந்தகம் அருகே தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.. மேல்மருவத்தூரில் ஏற்பட்ட ரயில்வே சிக்னல் காரணமாக சென்னையில் இருந்து திருவனந்தபுரம் போகக்கூடிய அனந்தபுரி விரைவு ரயிலும் நிறுத்தபட்டது.. சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ரயில் சேவை துவங்கப்பட்டது.

Tags

Next Story