40 எஸ்.ஐக்கள் பணியிட மாற்றம் : எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவு

40 எஸ்.ஐக்கள் பணியிட மாற்றம் : எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவு

எஸ்பி பாலாஜி சரவணன்

தூத்துக்குடி மாவட்டத்தில் 40 காவல்துறை உதவி ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த காவல் உதவி ஆய்வாளர்கள் 40 பேர்கள் ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நாணக்கிணறு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஆத்தூர் காவல் நிலையத்திற்கும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சிவராஜா தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்திற்கு தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பிரம்மா ராஜ் குரும்பூர் காவல் நிலையத்திற்கு தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையத்தில் இருந்து சட்டநாதன் புதியமுத்தூர் காவல் நிலையத்திற்கும் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிவக்குமார் தூத்துக்குடி வடபழம் காவல் நிலையத்திற்கும் இதேபோல் மாவட்டத்தில் உள்ள 40 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தடுப்பதற்காகவும் குற்ற செயல்கள் ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுக்க அதிரடியாக 40 காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Next Story