புகார் மீது நடவடிக்கை எடுக்காத பெண் சப்- இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்

புகார் மீது நடவடிக்கை எடுக்காத பெண் சப்- இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்

புகார் மீது நடவடிக்கை எடுக்காத சப் இன்ஸ்பெக்டர் மாற்றம்

மேல் அதிகாரிகளின் உத்தரவை அடுத்து அவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்
திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரது தாயாரை சமயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தார். அங்கு தாயின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படாததால், திருச்சியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தார். அதற்காக சமயபுரத்தில் சிகிச்சை அளித்த மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் சம்மரி வழங்கும்படி கேட்டுள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளித்த விவரம் குறித்த அறிக்கையை தரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் சிதம்பரம் புகார் அளித்தார். அந்த புகார் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இந்நிலையில், சமயபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாலதியை ஜீயபுரம் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து மேல் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Tags

Next Story