வேங்கிகால் ஊராட்சியில் ரூ.3.67 கோடியில் மின்மாற்றி

வேங்கிகால் ஊராட்சியில் ரூ.3.67 கோடியில் மின்மாற்றி

துவக்க விழா 

திருவண்ணாமலை அருகே வேங்கிகால் ஊராட்சியில் ரூ.ரூ.3.67 கோடியில் அமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட மின்மாற்றியை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிகால் ஊராட்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் ரூபாய் 3.67 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மின்மாற்றியை 10 எம்விஏ-லிருந்து 16 எம்விஏ-க்கு, 110/11 கேவி எஸ்.எஸ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story