காவேரிப்பாக்கம் அருகே ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர்

காவேரிப்பாக்கம் அருகே ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர்

ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்ஃபர் 

காவேரிப்பாக்கம் அருகே ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாகாணிப்பட்டு ஊராட்சியில் உள்ள காட்டான் காலனி பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கிருந்து அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிரான்ஸ்பார்மரின் சிமெண்டு கம்பங்களில் உள்ள சிமெண்டு கான்கிரீட்டுகள் பெயர்ந்து,

உள்ளே இருக்கும் கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின் கம்பங்கள் முறிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது. இதனால் இந்த டிரான்ஸ்பார்மரை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே இந்த டிரான்ஸ்பார்மரின் கம்பங்களை அகற்றி விட்டு புதிய கம்பங்கள் அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். விபத்து ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story