மின்மாற்றி பழுது - மக்கள் அவதி !

மின்மாற்றி பழுது - மக்கள் அவதி  !

மின்மாற்றி

மின்மாற்றிபழுதடைந்ததால் கடந்த ஒரு மாதமாகவே குறைந்த மின் அழுத்தமும், அடிக்கடி மின்த டையும் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மின் வினியோகம் தடைபட்டதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மின்மாற்றிபழுதடைந்ததால் கடந்த ஒரு மாதமாகவே குறைந்த மின் அழுத்தமும், அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மின் வினியோகம் தடைபட்டதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மின்மோட்டாரை இயக்க முடியாததால் தண்ணீர் எடுப்பதற்கு நீண்ட துாரம் நடந்து செல்லும் நிலை உள்ளது.இதனால் அதிருப்தி யடைந்துள்ள மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

Tags

Next Story