வாசுதேவநல்லூரில் வைக்கோல் படப்பில் தீ விபத்து

வாசுதேவநல்லூரில் வைக்கோல் படப்பில் தீ விபத்து

தீயை அணைக்கும் பணியில் வீரர்கள்

வாசுதேவநல்லூரில் வைக்கோல் படப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு சுமார் 300 கட்டு வைக்கோல்களை சேமித்து வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று இரவு இந்த வைக்கோல் படப்பில் திடீரென தீ பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது.

இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையில் இருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வாசுதேவநல்லூர் தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.

இந்த செயலை கண்ட பொதுமக்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்புத்துறையை வெகுவாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story