சாத்தூரில் கொட்டும் மலையில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சாத்தூரில் கொட்டும் மலையில்  போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
 சாத்தூரில் கொட்டும் மலையில் தமிழக அரசை கண்டித்து 100க்கு மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சாத்தூரில் கொட்டும் மலையில் தமிழக அரசை கண்டித்து 100க்கு மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து சங்கங்கள் சார்பாக 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான அரசு போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வராததால் தற்காலிக பணியாளர் களை கொண்டு 90 சதவீத பேருந்து கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அரசு போக்கு வரத்துதுறை அதிகாரிகள் தற்காலிக பணியாளர்களை கொண்டு அரசு பேருந்துகளை இயக்குவதை கண்டித்து சாத்தூரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு 100 மேற்பட்ட அனைத்து போக்குவரத்து சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் கொட்டும் மழையிலும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மற்றும் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழில் சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story