திருவிதாங்கோடு பள்ளிவாசல் ஆண்டு விழா

திருவிதாங்கோடு பள்ளிவாசல் ஆண்டு விழா

கொடி ஊர்வலம் 

திருவிதாங்கோடு ஆத்மீக சுடரொளியின் மகான் மாலிக் முஹம்மது ஸாஹிப் ஒலியுல்லாஹ் (ர.அ) அவர்களின் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
குமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஆத்மீக சுடரொளியின் மகான் மாலிக் முஹம்மது ஸாஹிப் ஒலியுல்லாஹ் (ர.அ) அவர்களின் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கி வருகிற 06.-ம் தேதி முடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அழகிய மண்டபம் புகாரி பள்ளிவாசலில் இருந்து நேற்று மாலை 6:30 மணிக்கு கொடி ஊர்வலம் தொடங்கியது. திருவிதாங்கோடு மகான் மாலிக் முஹம்மது ஸாஹிப் ஒலியுல்லாஹ் பள்ளிவாசல் ஒன்பது மணி அளவில் வந்து சேர்ந்தது. பின்னர் பள்ளி வளாகத்தில் கொடியை ஏற்றி வைத்து நேர்ச்சை வழங்கினார். மேலும் ஆறாம் தேதி இரவு வரை தினமும் மார்க்க அறிஞர்களின் இஸ்லாமிய அறநெறிகள்,மார்க்க சட்டங்கள், நீதி போதனைகள், மகன் அவர்களின் வரலாறு ஆகியவை குறித்து சிறப்புரையாற்றுவார்கள். மார்க்க சொற்பொழிவுகளை கேட்டு பயனடையுமாறு திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் செயலாளர் முகம்மது யூசுப், தலைவர் சாகுல் ஹமீது, துணைத் தலைவர் அப்துல் பாத்தாஹ், துணைச் செயலாளர் மாலிக் முகம்மது, திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் தலைமை இமாம் சுல்பீக்கர் அலி ஜலாலி பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

Tags

Next Story