தண்ணீர் லாரி மீது மரம் விழுந்து விபத்து

தண்ணீர் லாரி மீது மரம் விழுந்து விபத்து

கோவையில் கனமழை காரணமாக ரோட்டிலுருந்த மரம் அருகிலிருந்த தண்ணீர் லாரி மீது விழுந்தது.

கோவையில் கனமழை காரணமாக ரோட்டிலுருந்த மரம் அருகிலிருந்த தண்ணீர் லாரி மீது விழுந்தது.

கோவையில் இன்று மாலை பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்த காரணமாக நகரின் பல சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனிடையே கோவை கே.ஜி தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் உள்ள பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது இந்த மரம் விழுந்ததில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சிக்கிக் கொண்டனர்.தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மரக்கிளைகளை அகற்றி ஓட்டுனர் மற்றும் நடத்துனரை சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட இருவரும் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டது.மழை காரணமாக சாலையில் விழுந்த மரத்தை மர அரவை இயந்திரங்கள் கொண்டு அப்புறப்படுத்தும் பணி நடைபெறுவதால் கே.ஜி தியேட்டர் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

Tags

Next Story