மரம் நடும் விழா : கேரள மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் பங்கேற்பு

மரம் நடும் விழா : கேரள மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் பங்கேற்பு

மரம் நடும் விழா

ஒத்தக்கடையில் கேரள மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ராஜமாணிக்கம் தலைமயில் மரம் நடும் விழா நடைபெற்றது.

கேரள மாநிலம் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ராஜமாணிக்கம் ஐஏஎஸ் தலைமையில் மரம் நடு விழா யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 165 ஆவது வார நிகழ்வாக மரம் நடும் விழா ஒத்தக்கடையில் மேலூர் மெயின் ரோட்டில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அருகில் நடைபெற்றது. ஒத்தக்கடை ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தென்னவன் வரவேற்றார். ஆலோசகர் பாண்டி முன்னிலை வகித்தார். உறுப்பினர் கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார் .

சிறப்பு விருந்தினராக கேரள மாநிலம் ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ராஜமாணிக்கம் ஐஏஎஸ் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் மற்றும் தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக ராஜமாணிக்கம் ஐஏஎஸ் அவர்களுக்கு 'மனிதருள் மாணிக்கம் விருது' வழங்கப்பட்டது. நிகழ்வில் சிலம்பம், சுருள், பறையிசை போன்ற பாரம்பரிய கலைகள் நிகழ்த்தப்பட்டன. மாஸ்டர் அருண் குழுவினரின் நடனம் நடைபெற்றது. நிகழ்விற்கு தேவையான வாதானி, புங்கை, சரக்கொன்றை மரங்களை சிலம்பு மாஸ்டர் பாண்டி வழங்கினார். வலைகளை ராஜமாணிக்கம் ஐஏஎஸ் வழங்கினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் வாதானி, புங்கை, சரக்கொன்றை போன்ற மரங்கள் நடப்பட்டது. விழாவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஒத்தக்கடை கிளை மேலாளர் மாரியப்பன் மற்றும் ஆலோசகர்கள் ராகேஷ் , இளம் மக்கள் இயக்க நிறுவனர் குபேந்திரன், மாற்றம் தேடி நலம் அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன், சமூக ஆர்வலர்கள் செல்வி, கலைவாணி, காயத்ரி, கார்த்திக் , பாலா, ஸ்டெல்லா மேரி, பரமேஸ்வரன், பாஸ்கரன், பசுமை சாம்பியன் அசோக் குமார், பாரதி, அப்துல் கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் மணிமாறன், வழிகாட்டி மணிகண்டன், ரமேஷ் குமார், ஆடிட்டர் சதீஷ், சசிகுமார் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரங்கள் நட்டனர். ஆலோசகர் பிரபு நன்றி கூறினார்.

Tags

Next Story