பள்ளியில் மரக்கன்று நடும் விழா

பள்ளியில் மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

திருவேணி அகாடமி பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டியில் உள்ள திருவேணி அகாடமி பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் புங்கன், வேம்பு, இலுப்பை, மூங்கில், நீர் மருது, நாவல், குமிழ் தேக்கு, மலைவேம்பு உள்ளிட்ட 60 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு மாணவ - மாணவியருக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.

Tags

Next Story