உலக மண்வள தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா

உலக மண்வள தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா

திருப்பத்தூரில் உலக மண்வள தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டன

திருப்பத்தூரில் உலக மண்வள தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உலக மண்வள தினத்தை முன்னிட்டு 1250 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அண்ணா நகர் பகுதியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உலக மண்வள தினத்தை முன்னிட்டு பசுமை தாய்நாடு அறக்கட்டளை நிறுவனர் சத்யராஜ் தலைமையில் 1250 மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மற்றும் நாட்டு நலப்பணி மாணவிகளுடன் சேர்ந்து மரக்கன்றுகளை வைத்தார்.

இதனை தொடர்ந்து மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் பென்னை,மருதம்,மகிலம், மூங்கில் உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனர் உடன் இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் புஷ்பராஜ், முத்து மாணிக்கம், கல்லூரி முதல்வர் ரெனி சகாயராஜ், பசுமை தாய்நாடு அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் நாட்டு நல பணி மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story