தாராபுரம் வட்ட சட்டப்பணி குழு சார்பில் மரக்கன்றுகள் நடுவிழா

தாராபுரம் வட்ட சட்டப்பணி குழு சார்பில் மரக்கன்றுகள் நடுவிழா

மரக்கன்று நடும் விழா 

நஞ்சியம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட என். குமாரபாளையம் கிராமத்தில் தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நஞ்சியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட என் .குமாரபாளையம் கிராமத்தில் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் ஆணைப்படி தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மரம் நடும் விழா தாராபுரம் சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சக்திவேல் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

மேலும் தாராபுரம் மாவட்ட உரிமையியல் நீதிபதி திருமதி மதிவதனி வணங்காமுடி, தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிபதி உமா மகேஸ்வரி, தாராபுரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கலைச்செழியன், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நஞ்சயம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

மேலும் சுற்றுச்சூழல் காக்க அனைவரும் மரக்கன்றுகளை நட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்ச்சிகள் ஊர் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story