மரங்கள் மக்கள் இயக்கம் கலந்தாய்வு கூட்டம்!

மரங்கள் மக்கள் இயக்கம் கலந்தாய்வு கூட்டம்!

மரங்கள் மக்கள் இயக்கம்

விளாத்திகுளத்தில் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பாக வேப்பமரம் பயிர் இடுதல் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பாக விவசாயிகளுடன் வேப்பமரம் பயிர் இடுதல் குறித்து நடைபெற்ற கலைந்தாய்வு கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் வேப்ப மரத்தின் பலன்கள் குறித்து அக்ரி துறையைச் சார்ந்த ராமமூர்த்தி அவர்கள் ஆலோசனை வழங்கினார். மேலும் மரங்கள் அதிகமாக நடக்கூடிய கிராம ஊராட்சிகள், பள்ளிகள்,கல்லூரிகள், தன்னார்வலர்களுக்கு நினைவு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கினர். நிகழ்வில் மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக இயக்குனர் ராகவன் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக் கண்ணன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன், புதூர் பேரூராட்சி செயலாளர் மருது பாண்டியன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதாஅழகுராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் மிக்கேல்நவமணி, தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், ஞானகுருசாமி,நடராஜன் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், ராதாகிருஷ்ணன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story