மலை கிராம பிஎஸ்என்எல் டவரில் சோதனை ஓட்டம்

மலை கிராம பிஎஸ்என்எல் டவரில் சோதனை ஓட்டம்

பைல் படம் 

பெரும்பாறை பகுதி மலைக்கிராமங்களில் புதிதாக அமைக்கப்பட்ட பிஎஸ்என்எல் நிறுவன செல்போன் டவர்களில் நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது.
பெரும்பாறை பகுதி மலைக்கிராமங்களில் அதிக தொலை தொடர்பு வசதி இல்லாமல் இருந்ததால் பிஎஸ்என்எல் செல்போன் டவர் அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று புல்லாவெளி, வெள்ளரிக்கரை, குப்பமாள்பட்டி, கவிக்காடு, கரடிபாறை பகுதிகளில் 5 பிஎஸ்என்எல் டவர் அமைக்கும் பணி நடந்து முடிவடைந்தது.இந்நிலையில் புல்லாவெளி, வெள்ளரிக்கரை ஆகிய 2 பிஎஸ்என்எல் டவரில் நேற்று சோதனை ஓட்டம் நடந்தது. மற்ற 3 டவர்களில் சில நாட்களில் சோதனை ஓட்டம் விடப்படும். பின்னர் அடுத்த வாரத்தில் 5 பிஎஸ்என்எல் டவர்களும் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story