மறைந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் படத்திற்கு அஞ்சலி

மறைந்த  நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ்  படத்திற்கு அஞ்சலி

நாகை மாவட்டம் திருமருகலில் மறைந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


நாகை மாவட்டம் திருமருகலில் மறைந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாகை மாவட்டம் திருமருகலில் மறைந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திருவுருவ படத்திற்கு அஞ்சலி நாகை மாவட்டம் திருமருகல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினரும்,நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜ் எம்.பி கடந்த சில நாட்களுக்கு முன்னால் மறந்ததை அடுத்து அவரின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கி செல்வராஜ் எம்.பியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட பொருளாளர் பாபுஜி ,மாத சங்க மாவட்ட செயலாளர் மேகலா,ஒன்றிய விவசாய சங்க செயலாளர் தங்கையன்,ஒன்றிய தலைவர் மாசிலாமணி,விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன்,இளைஞர் பெருமன்ற மாவட்ட நிர்வாகி சந்திரமோகன்,ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story