அமமுக சார்பில் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி

அமமுக சார்பில் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி

அமமுக சார்பில் எம்ஜிஆருக்கு 36 .ம் ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.

அமமுக சார்பில் எம்ஜிஆருக்கு 36 .ம் ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளை கழக நிர்வாகிகள் அனுசரிக்க உத்தரவிட்டிருந்தார் அதன்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாமக்கல் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 36.ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு நகரக் கழக செயலாளர் எஸ். வேலுச்சாமி தலைமையில், எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு நடைபெற்றது. இதில் நாமக்கல் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஏ.பி. பழனிவேல், முன்னிலையில் நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இரண்டு நிமிடம் அனைவரும் மௌன அஞ்சலியும் செலுத்தினர். இதில் நாமக்கல் வடக்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ். பன்னீர்செல்வம், துணைச் செயலாளர் கா.முருகன், பொருளாளர் வழக்கறிஞர் அன்புச் செழியன், ராசிபுரம் பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் குட்டி நடராஜ், மீனவர் அணி செயலாளர் பாலு, ராசிபுரம்ஒன்றிய கழக செயலாளர்கள் ராஜா, பாலசுப்பிரமணியம், நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் சதீஷ்குமார் ,பேரூர் கழகச் செயலாளர்கள் பெரியசாமி, சேகர், தாமோதரன், எம் .ரவி, ராசிபுரம் நகரக் கழக நிர்வாகிகள் அவைத் தலைவர் பூபதி, வார்டு கழக செயலாளர் செல்வம், குமரவேல், சார்பு மன்ற மாவட்ட இணை செயலாளர் சிவா, பேரூர் சங்கமேஸ்வரன், உள்ளிட்ட மகளிர் அணியினர் வார்டு கழக செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story