எம்ஜிஆர் அவர்களின் 36.ம் ஆண்டு அதிமுக சார்பில் நினைவஞ்சலி

எம்ஜிஆர் அவர்களின் 36.ம் ஆண்டு அதிமுக சார்பில் நினைவஞ்சலி

எம்ஜிஆர் அவர்களின் 36.ம் ஆண்டு அதிமுக சார்பில் நினைவஞ்சலி

எம்ஜிஆர் அவர்களின் 36.ம் ஆண்டு அதிமுக சார்பில் நினைவஞ்சலி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனைத்து பகுதிகளிலும் அனுசரிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி ராசிபுரம் நகரக் கழகத்தின் சார்பில் நகர கழக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவருமான எம். பாலசுப்பிரமணியம், தலைமையில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள புரட்சித்தலைவரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். மேலும் புதிய பஸ் நிலையம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி கற்பூரம் ஏற்றி வணங்கி மரியாதை செலுத்தினர். நேரம் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் இருந்தனர். இந்நிகழ்ச்சியில் கழக அவைத்தலைவர் எஸ்.பி.கந்தசாமி, மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் கே.பி. எஸ். சுரேஷ் குமார், வட்ட பேரவை இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான டி. ஆர்.பிரபு, மற்றும் முன்னாள், இந்நாள் நகர் மன்ற உறுப்பினர்கள், மகளிர் அணியினர், வார்டு கழக செயலாளர்கள், உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story