சீர்காழியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அஞ்சலி

சீர்காழியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு அஞ்சலி

நம்மாழ்வாரின் நினைவு தினம் அனுசரிப்பு

சீர்காழியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 10ம் ஆண்டு நினைவு தினம், ஏராளமான விவசாயிகள் விளைவித்த கீரை, பூசனி கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது, இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே இயற்கை விவசாயி நலம் சுதாகர் தலைமையில் நம்மாழ்வார் திருவுருவப்படத்திற்கு இயற்கையாக விளைந்த கீரை, பூசனி உள்ளிட்ட காய்கரிகளை வைத்து ஏராளமான விவசாயிகள் மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து செறிவூட்டப்பட்ட அரிசி என்பது இயற்கைக்கு எதிரானது இயற்கையாக விளைவிக்கப்படும் பொருட்களை விளைவிப்போம் மக்களை நலமுடன் காப்போம் என்று கூறி விவசாயிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story