செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் உள்ள நீத்தாா் நினைவுத் தூணுக்கு அஞ்சலி

செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் உள்ள நீத்தாா் நினைவுத் தூணுக்கு அஞ்சலி

அஞ்சலி

செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் உள்ள நீத்தாா் நினைவுத் தூணுக்கு அஞ்சலி
தீயணைப்பு தியாகிகள் தினத்தையொட்டி செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் உள்ள நீத்தாா் நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பணியின்போது வீர மரணம் அடைந்த வீரா்களுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலா் ராஜேஷ் கண்ணா தலைமையில் நீத்தாா் நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற மாவட்ட தீயணைப்பு அலுவலா்கள் மணிவண்ணன் மற்றும் சையது முகமது ஷா முன்னிலை வகித்தனா். தீயணைப்பு அலுவலா்கள் கிருஷ்ணமூா்த்தி ,செந்தில் குமரன், அசோக்குமாா், காா்த்திகேயன், சாமிநாதன், சீனிவாசன், ரவிக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story