தஞ்சாவூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தஞ்சாவூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பெரியார் சிலைக்கு மாலை
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 50ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்

தஞ்சாவூர் அருகே வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில் தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வல்லத்தில் உள்ள பெரியார் உருவச் சிலைக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா செ.வேலுசாமி தலைமையில், பல்கலைக் கழக பதிவாளர் பி.கே.ஸ்ரீவித்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பழைய பேருந்து நிலையத்திலுள்ள உள்ள தந்தை பெரியார் உருவ சிலைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் செ.வேலுசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலுள்ள உள்ள தந்தை பெரியார் உருவ சிலைக்கு பல்கலைக்கழக இயக்குனர் பேராசிரியர் எஸ்.செந்தமிழ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், பல்கலைக்கழக பேராசிரியர்கள், இயக்குநர்கள், பணியாளர்கள், கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story