ஈழதமிழர்கள் பிரச்சனையில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி!

ஈழதமிழர்கள் பிரச்சனையில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி!

 நினைவேந்தல் நிகழ்ச்சி 

ஈழதமிழர்கள் பிரச்சனையில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு விசிக சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி .
அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஈழதமிழர்கள் பிரச்சனையில் உயிர் தியாகம் செய்த முத்துகுமார் உள்ளிட்ட 19 தியாகிகளுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி அரியலூர், செந்துறை சாலையிலுள்ள கோவைகிருஷ்ணா கூட்டரங்கில் நடைப்பெற்றது. மாவட்ட செயலாளர் அங்கனூர் சிவா தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் முத்துகுமார் உள்ளிட்டோரின் திருவுறுவ படத்திற்கு மாலை அணிவித்து மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தபட்டது. இதனையடுத்து திருச்சியில் நடைப்பெற்ற விசிக மாநாட்டின் பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கபட்டது. இதில் மண்டல, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, முகாம் பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story