திருச்செங்கோடு : விஜயகாந்த் மறைவிற்கு தேமுதிகவினர் அஞ்சலி

திருச்செங்கோடு : விஜயகாந்த் மறைவிற்கு தேமுதிகவினர் அஞ்சலி

விஜயகாந்திற்கு அஞ்சலி

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு தேமுதிகவினர் திருச்செங்கோட்டில் அஞ்சலி செலுத்தினர்
நாமக்கல் தேமுதிக வடக்கு மாவட்ட கழக சார்பில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு நாமக்கல் வடக்கு மாவட்ட கழக செயலாளர் விஜய் சரவணன் சார்பிலும் மற்றும் திருச்செங்கோடு நகர கழக சார்பிலும் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் அவருடைய திருவுருவப்படத்தை அலங்கரித்து திருச்செங்கோடு நகரக் கழக செயலாளர் எஸ் கே குணசேகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார், உடன் மாவட்ட கழக துணைச் செயலாளர் சக்திவேல், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மற்றும் மாவட்ட நெசவாளர் அணி துணைச் செயலாளர் முனியப்பன், திருச்செங்கோடு நகர நிர்வாகிகள் அவைத்தலைவர் குட்டி ஆறுமுகம், பொருளாளர் ரத்தினம்,பெரியசாமி, கண்ணன், வார்டு நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்ணீர் மல்க தலைவர் கேப்டன் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்

Tags

Next Story