அரசு போக்குவரத்துக்கழக  பணிமனை விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி

அரசு போக்குவரத்துக்கழக  பணிமனை விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி

விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி

பொறையார் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

மயிலாடுதுறை அருகே பொறையாரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை ஓய்வறை கட்டிடம் கடந்த 20.10.2017 அன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பிரபாகரன், மணிவண்ணன், தனபால், பாலு, ராமலிங்கம், சந்திரசேகர் முனியப்பன், அன்பரசன் ஆகிய 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் 6,ம் ஆண்டு நினைவஞ்சலி பொறையாறு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அனுசரிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் திருவுருவ படத்திற்கு பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ நிவேதா முருகன் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தொழிலாளர்கள் மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story